Thursday 24 October 2013

மீண்டும் நானாக


















சிதறுண்ட தேங்காயைப்போல்
சிரிப்பலைகளை எழுப்பி,
உணர்வுகளை
ஒவ்வொரு விநாடியும்
உற்சாகத்துடன் அனுபவித்து
களித்து,
கலந்து,
சிரித்து,
சுவைத்து,
மகிழ்ந்து,
மலர்ந்து,
வாழ்வதில்
இனிமை கண்டிருந்தேன்,
இந்த காதலெனும்
நோய் வரும்வரை.
மாற்றித்தான் விட்டதென்னை,

நீ மகிழ நான் மகிழ்ந்து,
நீ மலர நான் மலர்ந்து,
நீ சிரிக்க நான் சிரித்து,
ஒரு நொடி
உன் முகமலர்ச்சி மாற
உற்சாகம் பறி கொடுத்து,
உனக்கெனவே துடிக்குமோர்
இதயத்தை
எனக்குள்ளே பொருத்திக்கொண்டேன்.

நானாக இருந்த என்னை,
நின் சொல் கேட்டு நடக்கும்
குழந்தையாய் மாற்றி விட்டாய்.

நில்லென்றால் நின்று,
நட என்றால் நடந்து,
பாரென்றால் பார்த்து,
உனை மட்டும் பார்த்து,
போவென்றால் போய்,

மாற்றித்தான் விட்டாயென்னை.
நானும்,
மீண்டும் நானாக மாற
விருப்பமின்றி….!

No comments:

Post a Comment