வானத்திலுலவும்
வண்ணப்பறவையின்
சிறகு கொண்டு,
சந்தோஷ
வெளிச்சப்புள்ளிகளை
உடலெங்கும்
சிதற விட்டு,
மழைக்காற்று,
குளிர்மேகம்,
மின்னல் பூ,
நிலா பந்தல்,
நிழல் பூமி,
அமைதிக்கடல்,
அத்தனையும்
ரசித்தபடி
சுற்றித்திரிந்தவனை,
காதலெனும்
அம்பெடுத்து
எனை வீழ்த்தி,
மடியிலிட்டு
கொஞ்சினாய்.
பறப்பதை விட
இலகுவான மனம்
கண்டு
உன்
புன்னகையில்
இன்பமத்தனையும்
ஒருங்கே
கண்டேன்.
வேடன்
வில்லால்
விலகிப்போன
அடுத்த நொடி
விம்மியழும்
குழந்தையென
நினைவற்ற
நிமிடங்களில்
தொலைந்தது.
சுதந்திரமாய்
சுற்றித்திரிந்தயெனை
கண்டு
பிரியப்பட்டு,
இன்று,
சுருண்டு கிடப்பதைக்
காண நீ
சகியாயென
மீண்டுமுணர்ந்து
சிறகை திரும்ப
விரிக்கலானேன்.
கனம் கூடிய
சிறகினால்
இனி பறத்தல்
எளிதன்று.
எனினும்,
என் தேவதையின்
மகிழ்வைக்காண
பறப்பேன்,
மேலும், மேலும்,
பறப்பேன்...!
வாழ்த்துக்கள், மேன்மேலும் பறக்க வேண்டுகிறோம்.
ReplyDeletethank u
ReplyDelete