விடுகதையான
தினசரி
காலைகளின் மேல்
வேண்டுமென்றே
ஏறி அமர்ந்து
வேண்டுமளவு
அழுத்தம் கொடுத்து
வெடித்து
திறந்து
விடை
கிடைக்குமென எதிர்பார்த்து
வீணாகிப்போனதென்
நாட்கள்.
பல்லால்
கடித்தும்
பறித்தும், இழுத்தும்,
இடித்தும்
பார்த்தேன்.
இயலாமை
பெருகித்தான் போனது.
விடை
மட்டும் கிடைத்த பாடில்லை.
வேதனையுடன்
வெட்கித்தலை
குனிந்திருந்தேன்.
அட,
இதுதான்
ரகசியமா?
உடனே
எழுந்து
விடுகதையை
கட்டிப் பிடித்து
அருகில்
இழுத்து
இன்முத்தம்
கொடுத்தேன்.
விடுகதை
விழித்து, சிரித்து
என்
விழி பார்த்து
விடையை
சொல்லியது!
வாழ்க்கையே
இனிமையானது!
No comments:
Post a Comment