Tuesday 29 October 2013

விடுகதை


















விடுகதையான
தினசரி காலைகளின் மேல்
வேண்டுமென்றே ஏறி அமர்ந்து
வேண்டுமளவு அழுத்தம் கொடுத்து
வெடித்து திறந்து
விடை கிடைக்குமென எதிர்பார்த்து
வீணாகிப்போனதென் நாட்கள்.

பல்லால் கடித்தும்
பறித்தும், இழுத்தும்,
இடித்தும் பார்த்தேன்.
இயலாமை பெருகித்தான் போனது.
விடை மட்டும் கிடைத்த பாடில்லை.

வேதனையுடன்
வெட்கித்தலை குனிந்திருந்தேன்.
அட,
இதுதான் ரகசியமா?
உடனே எழுந்து
விடுகதையை கட்டிப் பிடித்து
அருகில் இழுத்து
இன்முத்தம் கொடுத்தேன்.

விடுகதை விழித்து, சிரித்து
என் விழி பார்த்து
விடையை சொல்லியது!
வாழ்க்கையே இனிமையானது!

No comments:

Post a Comment