தமிழமுதில்
என் நா இனிக்கும்,
தமிழ்ச்சுவையில்
என் வாய் மணக்கும்,
தமிழருந்த என்
மனம் இனிக்கும்,
தமிழ்
மூச்சில் என் உயிர் பிறக்கும்.
தமிழனுக்குத் தனி பெருமையுண்டு,
துணிவுடனே மனச் செருக்குமுண்டு,
தரணியெங்கும் அவன் புகழைக்கண்டு
தலைவணங்கும் எத் திசையுமிங்கு!
கவியெழுத என் கரம் துடிக்க
கருத்தினிலே தமிழ் கலந்திருக்க,
விருத்தமுடன் பா வரைந்தெடுக்க
விழையுமெந்தன் மன மகிழ்ந்திருக்க.
பாடலுடன் உரை கலந்தபடி
பிறக்குமொரு கதை நினைத்தபடி,
கதைக்களமே நம் தமிழெனவே
காதலுடன் அதை அறிந்திடடா!
No comments:
Post a Comment