Wednesday 16 October 2013

ஓருயிர்














தேடுதல் நிறைந்த எந்தன்
பார்வையை நிலைக்க வைத்து
தேவரும் கண்டறியா
தேனிதழ் முத்த மீந்து
காலமும் சொல்லும்வண்ணம்
காதலாய் ஊற்றெடுத்து
பாடுமென் கவிதைகட்கு
கருவென வந்தவள் நீ!

ஊறுமுன் நெஞ்சிலென்மேல்
அன்பெனும் தேனினூற்று!
ஊழினும் வலிது எந்தன்
காதலின் மென்மை காற்று,
ஈருடல் எனினுமென்ன
ஓருயி ரான மூச்சு,
இன்பமாய் நமது வாழ்வு

நமதென எங்கும் பேச்சு!

No comments:

Post a Comment