Sunday 20 October 2013

ஆடு புலி ஆட்டம்




















ஆடு புலி ஆட்டத்தில்
சில நேரம்
கட்டுப்படும் புலிகளும்,
பல நேரம்
வெட்டுப்படும் ஆடுகளும்,
சிக்குண்ட புலியாய் என்
சிந்தனையை நான் அடக்க,
வெட்டுப்பட்ட ஆடாகவும்
இடையிடையே என் மனமே.!
ஆடுவதும் நானே,
ஆட்டுவிப்பதும் நானே,
எனில்,
எதற்கிந்த ஆட்டம்?
என்று கலைக்கப்படும்?
எழுந்து போக வழியின்றி
ஏதோ ஓர் இருக்கத்தில்,
ஏதோ ஒரு கட்டளைக்காக,
என்னென்று புரியாமலே,
ஆட்டம் மட்டும்
தொடர்ந்தபடி….!

No comments:

Post a Comment