Wednesday 30 October 2013

பந்தி

சில காலம் முன்பு மார்த்தாண்டம் அருகில் ஒரு நண்பர் வீட்டு நிகழ்விற்கு நானும் என்னுடன் இன்னும் சில உயர் அதிகாரிகளும் சென்றிருந்தோம். நிகழ்வு முடிந்து சாப்பாடு நேரம் வந்தது. அந்த நண்பர் எங்களிடம் வந்து சிறிது நேரம் அந்த மரத்தடியில் இளைப்பாறுங்கள். ஒரு பந்தி முடியட்டும் என்றார்.
நாங்கள் ஊரில் மிக முக்கியமான நபர்கள் இருப்பார்கள் போலும், அவர்களுக்கு முதல் பந்தியாக இருக்குமென நினைத்தபடி அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.
ஆனால் என்ன ஆச்சரியம்! முதல் பந்திக்கு அவர்கள் அந்த ஊரில் இருந்த ஏழை உழைப்பாளி மக்களை அழைத்து விருந்துண்ண வைத்தார்கள்.
எங்களின் மன மகிழ்விற்கும், ஆச்சரியத்திற்கும் எல்லையே இல்லை. அதுபோல ஒரு முதல் பந்தியை நான் அதுவரை பார்த்ததில்லை. அதற்குப் பிறகும் பார்த்ததில்லை.
எத்தனை பேருக்கு அப்படி மனம் வரும்? உழைப்பாளி மக்களுக்கு முதல் பந்தி கொடுத்து பின்னர் எங்களைப் போல விருந்தாளிகளுக்கும், உறவினர்களுக்கும், முக்கிய மனிதர்களுக்கும் பந்தி பரிமாற எவ்வளவு பேருக்கு தைரியம் உண்டு?
என் வீட்டு நிகழ்வுகளையேனும் அப்படி நடத்தவேணுமென என் மனதில் ஒரு எண்ணம் அப்போது விதைந்தது.

No comments:

Post a Comment