Tuesday 22 October 2013

அமுதாய்


வெட்டிவிட்டால்
விட்டு விடுவேனென
நினைத்தாயோ?
கரமா? காலா?
முடியா? முகமா?
போனால் போகட்டுமென
நினைக்க!
உள்ளத்துள் நுழைந்து
உயிருடன் கலந்த
ஒன்றன்றோ நீ?
செதுக்கினால்
உன்னுளச் சிலையாவேன்.
நொறுக்கினால்
உன்னுயிர்த் துகளாவேன்.
நறுக்கினால்
உன்னுயிர் விதையாவேன்.
கடித்தும்,
குடித்தும்,
சுவைத்தும் பார்…!
உன்னுயிர் காக்கும் அமுதாய்
ஒவ்வொரு துளியிலும்
திகழ்வேன்…!

No comments:

Post a Comment