விழித்திரைகளில்
வழிந்த
நீர்த்துளிகளை
வழிக்க
மனமின்றி
கனவு
தேசத்தின் வாசலில்
காத்துக்
கிடந்தேன்.
அழுவதில்
உடன்பாடில்லாதவன்தான்,
எனினும்,
உணர்ச்சிக்
குவியல் முன்பு
எதிர்ப்புகள்
மழுங்கிப் போகின்றன.
தடைகளை
உடைத்து
கனவு
தேசத்தில்
கால்
வைத்த அந்நாட்களை
மீட்டெடுக்க
இயலாமல்,
மீண்டும்
எனக்குள்ளே
உருக்கிய
பாதரசத் துளிகளுடன்
உடன்பாடில்லாமல்
நானும்
உருகிக்
கொண்டிருக்கிறேன்…!
No comments:
Post a Comment