விடை கொடுத்தாய் விழி நிறைந்தேன்,
விரல் நழுவ சிறகடித்தாய்,
உடைந்ததொரு கனவுயென
உல்லாசப்பறவையாய்
உயர்வானம் தொடப் பறந்தாய்.
காலுடைந்த கனவினைக்
கைப்பற்றி நான்
கவிதைத் தீவில் தனித்திருந்தேன்.
உருவிய விரல் இடுக்கெலாம்
ஒழுகுமுன் ஞாபகங்கள்
உருவமிலா நினைவுகளாய்
கவிதைகளின் கருவாய்,
கற்பனைக்கு விருந்தாய்
என் காலமெல்லாம் இனி
தொடர்ந்தே இருக்கும்.
என்றேனும் ஒரு நாள்
எனைத் திரும்பி அழைத்தால்
எழும்பி வர என் சிறகில்
வலு இருக்குமா?
வடித்த என் கவிதைகளில்
முகம் புதைக்குமா?
No comments:
Post a Comment