Sunday 27 October 2013

விந்தைக்காரி
























வீரத்தின் விதைகளை மண்ணில் விதைத்து
விழிகளிலே சினம் நிறைத்து
உணர்வுகளின் ஏடுகளை தினம் சுமந்து
பலருக்கும் பேரிடியாய் இருந்த என்னை,
இரு விழியால் கதை சொல்லி,
இதழோர நகை சிந்தி
மயக்கத்தின் வாசலிலே நிற்க வைத்து,
ஒரு வார்த்தையில் அடக்கி விட்டாயே!
விந்தைக்காரிதான் நீ!

No comments:

Post a Comment