Tuesday 22 October 2013

மனது
























சுருங்கியும் குறுக்கியும்
சுவையினைக் கூட்டி
சுகப்பட தவிக்கும் பொன்மனது.

நாவிற்கும் தெரியாத
நற்சுவை அறிந்து
நர்த்தனமாடிய நல்மனது.

வெளிச்சத்தில் சிதறிய
வெண்பனியிலும்
வண்ணங்களை
விகசித்து நோக்கிய மென்மனது.

எல்லாம் தெரிந்தும்
ஏதும் புரியாத
எகாந்த வெளியில்
எக்காளமிட்ட என்மனது.

இப்படிக் கலவையாய்
இருந்ததின்று
தேடலில் நுழைந்து
கவிதைகள் புனைந்து
சேகரிப்பதெல்லாம்
உன் நினைவுகள் மட்டுமே!

No comments:

Post a Comment