Wednesday 23 October 2013

பயணங்கள்



















பிறர் தேடல்களில் நான் இருப்பதில்லை,
எனில்,
உன்னிதழ் வழி ஒழுகும் மொழியிலுமில்லை,
உன் விரல் வழி பெருகும் கருவிலுமில்லை,
இமை, விழி தடவும் உருவிலும் இல்லை,
பிழையென சொல்லி புறந்தள்ளி எனை,
ஏக்கத்தின் பிடியில் இழைந்திட வைத்தாய்,
விலையற்றதாயோர்
விதைப்பினை போலெனை,
விதைத்து பின் முளைக்கவும் முடியா
கடின திரைகொண்டு மூடியது ஏன்?
இழைந்திட வழியில்லை,
பிழைத்திடும் கழிவில்லை,
இருப்பதும் விதியென,
பயன் தரும் விதமில்லா
பயணங்கள் கொண்டேனடி!

No comments:

Post a Comment