Friday 25 October 2013

ஏக்கம்



விழித்திரையில் வடித்த கவிதைக்கு
விளக்கம் கேட்பதில்லை யாரும்,
மனத்தோட்டம் பரப்பும் பூமணமோ
மயக்கும் வகையிலென்னாளும்,
உணர்வினிலே வாழும் காதலரின்
கனவினிசை புதிய வேதம்,
என் கவிதை உனை அடையும்
நாளுக்காய் ஏங்கு மென் மனம்!

No comments:

Post a Comment