Tuesday 2 July 2013

என்று வருவாள்?



கனவெனும் வாழ்க்கையில்
கவிதை சொன்னவள்,
தினமொரு பூவென
மலர்ந்து நிற்பவள்.
விழிமலர் விதையினைத்
தூவிச் செல்பவள்.
கனிமொழி தேன்குரல்
கலந்தினிப்பவள்.
என்மன வானிலே
இசைந்து பாடிட
என்னுயிர் தீபமாய்
என்று வருவாளோ?

No comments:

Post a Comment