Tuesday 2 July 2013

பெருமை கொள்ளும்



இடைவெளி யின்றி சுவாசம் எடு,
ஒவ்வோர் இழையிலும் இன்னுயிர் தேடு,
கரையெது மில்லா கடலுன் வீடு,
கவலைக ளின்றி நுழைந்து யிர்த் தேடு!

கார்முகில் கண்ணுள் கனவினைக் கொண்டு
காதலை வென்று கவலைகள் வேரறு,
வேர்வைகள் கொண்டு வியந்திடல் இன்றி
வாலிபக் கால வாழ்வினுள் சென்றிடு!

தோல்விகள் இல்லா சோகங்கள் சூழா
தோள்களும் இல்லை தோழனே வந்திடு,
பாரினுள் உந்தன் பேரதைச் சொல்ல
பெருமைகள் கொண்டு காத்திடும் நாடிது!

No comments:

Post a Comment