Friday 21 June 2013

நம்பிக்கை

மதம் பிடித்த மனிதரிடை
சிக்கித் தவிக்குது மனிதம்,
சாதிச் சாக்கடையின்
நாற்றம் சகிக்காமல்
சீர்குலைந்து நிற்கிறதென்
சமூகம்.
மனம் புணராக் காதல் புரிந்து
மன முடைந்து நிற்குது என்
தோழமைகள்.
ஒற்றுமையின் கதை சொல்லி
பாடம் படித்ததெல்லாம்
கால் தள்ளி மிதிக்குது என்
சுய நலம்.
வெளி நாட்டு மோகம்
என் நாட்டைக் களவாட
குலைந்து போகுது என்
கலாச்சாரம்.
எல்லாமிருந்தாலும்
எங்களுக்குள் ஒரு
நம்பிக்கைச் சூரியன்.
இளைய தலைமுறையின்
உள்மனதில்
பொங்கி வழியும் ஒர்
ஆதங்கம்,
இந்நிலை ஒரு நாள் மாறும்...!

No comments:

Post a Comment