Saturday 1 June 2013

எந்தனுயிர்

அசையும் காற்றில் கூந்தல் அலைபாய
இதழில் இனிதான முறுவல் கலந்தாட
விழியில் எனை வெல்லும் வித்தைக் கொண்டாய் நீ!
உந்தன் மகிழ்வென்னுள் உற்சாக மின்னலாய்
என்றும் உன்னோடு வாழும் அன்பனாய்
இருக்க வரம் கோரி இதயம் போராடும்,
இணையும் நாளில்தான் எந்தனுயிர் பூக்கும்!

No comments:

Post a Comment