Thursday 6 June 2013

கேள்விகள்

தொலை தூர கனவுகளில்
தொலையாத நினைவுகள்,
கண நேர தாமதத்தில்
தவறுமென் பயணங்கள்.
வலைவீசிக் விழித்திருந்தும்
சிக்காத இரவுகள்.
உனை எண்ணி காத்திருந்த
என் மனதில் கீறல்கள்.
சுகமென்று நினைத்தவற்றில்
சுவையற்ற படிவுகள்.
இவை கொண்ட என் மனத்தில்
ஏன் இன்னும் கேள்விகள்?

No comments:

Post a Comment