Friday 21 June 2013

சேர்ந்தேன்














எனைக் கண்ட மறு நொடி
எங்கிருந்தோ முளைத்தக்
காற்றணையக் கால்களுடன்
கடிதே வந்தாள்.
கட்டியணைத்துக்
கலங்கி நின்றாள்.

நேற்றிரவுப் பேசவில்லை
முந்தினமும் காணவில்லை,
பிரிவில்லை
சிறு பிணக்கம் தான்,
என்றாலும்
உயிர் மூச்சுக் காதலாய்
அவள் வாழ்வதால்,
இனியும் தாளாதென்று
ஓடிவந்தேன்.
எனைக் கண்ட மறு நொடி....

No comments:

Post a Comment