சுவை தரும் மதுவென
சுகம் தரும் இதழென
மணம் தரும் மலரென
உனைத் தரும் வரமளி!
கனியிதழ் தேன்துளி
கவிதையில் புதுமை நீ,
பனித்துளி போலொரு
பார்வையை வீசடி!
உன்னெழில் மூச்சிலே
உருகுவேன் நானடி,
கன்னி உன் பேச்சிலென்
கவிதையின் கருவடி!
துளிர்கரம் பற்றையில்
துவளுமுன் கொடியிடை,
வளர்பிறை நாளிலுன்
வளைக்கரம் பற்றுவேன்!
No comments:
Post a Comment