Tuesday, 25 June 2013

சுவை மது

சுவை தரும் மதுவென
சுகம் தரும் இதழென
மணம் தரும் மலரென
உனைத் தரும் வரமளி!

கனியிதழ் தேன்துளி
கவிதையில் புதுமை நீ,
பனித்துளி போலொரு
பார்வையை வீசடி!

உன்னெழில் மூச்சிலே
உருகுவேன் நானடி,
கன்னி உன் பேச்சிலென்
கவிதையின் கருவடி!

துளிர்கரம் பற்றையில்
துவளுமுன் கொடியிடை,
வளர்பிறை நாளிலுன்
வளைக்கரம் பற்றுவேன்!

No comments:

Post a Comment