Saturday 1 June 2013

யுகமாய்

உருகிடும் இதய துடிப்பினில் நீ
உள்ளம் நிறைந்த உணர்வாய் நீ
பருகிடும் காதல் ரசமாய் நீ
பழரசக் கோப்பை மதுவாய் நீ

இடையினில் கைகள் கோர்த்தேன் நான்
இடைவெளி யின்றி சேர்த்தேன் வான்
மதியினை போகச் சொன்னேன் காண்- உன்
முகமதி யொன்றே போதுமென்று!

நொடிகள் நிமிடம் நாளாகி,
நாளும் யுகமாய் மாறிடினும்
இதயம் கலந்த இந்நிலையில்
என்றும் மாறா நிலை வேண்டும்!

No comments:

Post a Comment