உருகிடும் இதய துடிப்பினில் நீ
உள்ளம் நிறைந்த உணர்வாய் நீ
பருகிடும் காதல் ரசமாய் நீ
பழரசக் கோப்பை மதுவாய் நீ
இடையினில் கைகள் கோர்த்தேன் நான்
இடைவெளி யின்றி சேர்த்தேன் வான்
மதியினை போகச் சொன்னேன் காண்- உன்
முகமதி யொன்றே போதுமென்று!
நொடிகள் நிமிடம் நாளாகி,
நாளும் யுகமாய் மாறிடினும்
இதயம் கலந்த இந்நிலையில்
என்றும் மாறா நிலை வேண்டும்!
உள்ளம் நிறைந்த உணர்வாய் நீ
பருகிடும் காதல் ரசமாய் நீ
பழரசக் கோப்பை மதுவாய் நீ
இடையினில் கைகள் கோர்த்தேன் நான்
இடைவெளி யின்றி சேர்த்தேன் வான்
மதியினை போகச் சொன்னேன் காண்- உன்
முகமதி யொன்றே போதுமென்று!
நொடிகள் நிமிடம் நாளாகி,
நாளும் யுகமாய் மாறிடினும்
இதயம் கலந்த இந்நிலையில்
என்றும் மாறா நிலை வேண்டும்!
No comments:
Post a Comment