Saturday 1 June 2013

இன்றும் நினைவில்

கடையில் சென்று
கால் கிலோ சர்க்கரை
வாங்கி வா என்றாளென் தாய்,
பாடலை இதழினில் சுமந்து,
நடையினில் துள்ளலை இணைத்து,
கடையில் சென்று
வாங்கித் திரும்பினேன்.
திரும்பவும் துள்ளலை
இணைத்தே நடந்தேன்.
சாலையில் சூரியன்
வீட்டினுள் இருட்டு.
விழிகள் இருட்டை வசப்படுத்த
நேரமெடுக்க
வீட்டின் முன்னறையில்
வைத்த கால்
அம்மா ஆற்றிய
மிளகாய் தூளில்...!
ஆஆ..!
அன்று அவளென்
முதுகில் வைத்தது,
மிளகாய் தூளை விட
காரம்.....!
இன்றும் நினைவில்...!

No comments:

Post a Comment