Friday 21 June 2013

அருஞ்சுவையே!

சுவை மறந்த நெஞ்சத்தில்
அருஞ்சுவையை தந்தவள் நீ!
வியர்த்தொழுகும் வெப்பத்தில்
வீசு தென்றலாய் வந்தவள் நீ!
கடுங்குளிர் காற்றினிடை
கதகதப்பாய் காத்தவள் நீ!
உறவுமற்ற நேரத்தில்
உறுதுணையாய் நின்றவள் நீ!
எனை மறந்த தேசத்தில்
எனக்குயிர் தந்தவள் நீ!
என்னவளாய் என்னிதயத்தில்
இன்பமழை பொழிந்தவள் நீ!
கண்மணியே என் காலமெல்லாம்
கை கோர்த்து வாழ்வாயா?

No comments:

Post a Comment