புன் முறுவல்
எனைக் கண்ட
உன் மலர் முகத்தில்
புன் முறுவல்.
கனியிதழில்
மென் துடிப்பு,
கண்ணிமைகள்
படபடப்பு,
விழிகளிலோ
ஒளிச் சிறப்பு,
நாசி மடல்
திறக்கையிலே
நன் மலரின்
சுக வனப்பு!
பொற்சிலையே கற்பகமே,
என்னாளும் இப்படியே
மனமகிழ்ந்து வாழ்ந்திடடி,
வருங்காலம் நமதென்று
No comments:
Post a Comment