Saturday 8 June 2013

எங்கே அவன்?

உறக்கம் தவிர்த்து
உயிர் தேடலில்
உருகித் தொலைந்தேன்.

கனவின் இடையிலா,
காற்றின் மொழியிலா?
வான வெளியிலா,
வண்ண முகிலிலா?

நீரின் பரப்பிலா,
நீளும் கருப்பிலா?
பகலின் ஒளியிலா,
பருவ மழையிலா?

மயக்கும் மதுவிலா,
மங்கை வனப்பிலா?
இயற்கை அழகிலா,
இன்ப இசையிலா?

எங்கும் நிறைந்தவன்,
எதிலும் வாழ்பவன்,
என்னுள் உறைபவன்,
எங்கே அவன்?

No comments:

Post a Comment