Saturday 1 June 2013

வெண்மதி

இதயத்தில் எழுதி வைத்த
கடிதத்தின் நகலெடுத்து
விழிகளில் ஒட்டி வைத்தேன்.
பூந்தளிர் கைகள் கொண்டு
இமைவிழி பிரித்தெடுத்து
இதழினில் பதித்துச் சென்றாய்.
கரையிலா நீரினிடை
துடுப்பிலா ஓடம் கொண்டு
தவித்திடும் தனியனாக,
கார்குழல் பிரித்தெடுத்துன்
வெண்மதி காண வேண்டி
வானிடைத் தேடிச் சென்றேன்.
உயிரினில் கலந்த உன்னை
தேடலை விடுத்துக் காண
மகிழ்ந்து இக் கவிதை தந்தேன்.

No comments:

Post a Comment