Friday 21 June 2013

பாட்டு ஏன்?

உன்னழகைக் கண்டு நான்
உண்மையிலே
மதி மயங்கி போனேனடி.
இதழ் மொட்டில்
வெடித்து வரும்
புன்சிரிப்பு,
இரு விழியால்
எனைக் கொய்யும்
லாவகம்.
கருங்கூந்தல் நாகமென
பின்னித் தோள் தழுவ,
கை விரலில்
பாட்டு வைத்து
என்னை அதிர வைக்கிறாய்,
தேவதையே!
ஒரு நொடியில்
ஓராயிரம் பாடல்
உனக்கெனவே
நான் தருவேன்,
வா என்னோடு

No comments:

Post a Comment