Saturday 8 June 2013

மலர்ந்த முகம்

செம்பருத்தி பூச்சூடி
செந்நிற சேலைக் கட்டி
செவ்விதழில் நகைச் சூடி
செந்தாழம் பூவாய் வந்தாயடி?

இதழ் விரிந்த புன்னகையும்
இமை வளைந்த கண்ணசைவும்
எனை வெல்ல நீ தொடுக்கும்
எழிலான அஸ்திரங்கள்.

உன்னருகில் நான் நின்றால்
ஊருலகம் மயங்குதடி,
நம்மழகின் ரகசியமே
நம் மலர்ந்த முகமன்றோ!

No comments:

Post a Comment