மலர்ந்த முகம்
செம்பருத்தி பூச்சூடி
செந்நிற சேலைக் கட்டி
செவ்விதழில் நகைச் சூடி
செந்தாழம் பூவாய் வந்தாயடி?
இதழ் விரிந்த புன்னகையும்
இமை வளைந்த கண்ணசைவும்
எனை வெல்ல நீ தொடுக்கும்
எழிலான அஸ்திரங்கள்.
உன்னருகில் நான் நின்றால்
ஊருலகம் மயங்குதடி,
நம்மழகின் ரகசியமே
நம் மலர்ந்த முகமன்றோ!
No comments:
Post a Comment