Tuesday 25 June 2013

தாமரை

விரல்நகங்கள் விண்மீனைத் தெறிக்க
விழியோர வெண்ணிலவை ரசிக்க
பொன்வானம் பூப்பந்தல் அமைக்க
நல்லுறவாய் அவளென்னை அணைக்க

மயிலிரகால் மேகத்தைக் குழைத்து
காரிருளில் கண்புருவ மமைத்து
இதழோரம் அமுதங்கள் படைத்து,
கனவொன்றைத் தந்தாளே எனக்கு.

விடிகாலை விழியிமைகள் மலர்ந்து
மலர்சோலை வாசமதை நுகர்ந்து
இயல்பான வாழ்க்கையினை தொடங்க
எழுந்தேனென் தாமரையை நினைந்து!

No comments:

Post a Comment