Sunday 23 June 2013

புது மலரே!

இரவைக் கிழித்து வரும்
ஒளியின் கீற்றினுடை
காற்றின் திசையுடனே
ஆடும் மலர்களவை..

கோடை கதிர் வெயிலும்
வாடை பனி மழையும்
வாழ்வில் மாறி எனை
வாட்டி வதைத்தாலும்

எந்தன் நிலை உணர்ந்து
எண்ணம் மாற வைத்து
வண்ணம் மலர வைக்கும் உன்
கண்களே புது மலரன்றோ?

No comments:

Post a Comment