Sunday 23 June 2013

படித்தது

கணவன் அவசரமாக வேலைக்கு தயாராகிக் கொண்டிருந்தான். மனைவி அவனுக்கான சமையலை தயாராக்கி அவனுடைய கைப்பையில் வைத்துக் கொண்டிருந்தாள். அவர்களின் சுட்டிப் பெண் அடுத்த வாரம் ஒரு வயது நிரம்பப் போகிறது, கையில் கிடைக்கும் பொருளையெல்லாம் எடுத்து வீசி விளையாடிக் கொண்டிருந்தாள்.
அக்குழந்தையின் கைக்கெட்டும் தூரத்தில் ஒரு மருந்து குப்பி இருந்தது. அதைப் பார்த்து விட்டு கணவன் மனைவியிடம் சொன்னான், “அந்த பாட்டில குட்டிக்கு கைக்கு எட்டாம எடுத்து வை, அதில் விஷத் தன்மை உண்டு”, சொல்லி விட்டு வேலைக்கு கிளம்பி சென்று விட்டான்.
சென்ற ஒரு மணி நேரத்தில் திடுக்கிடும் தகவல் அலை பேசியில். அவனது குழந்தை அந்த மருந்தைக் குடித்து விட்டு இறந்து விட்டாள். விரைந்து வீட்டிற்கு செல்கிறான்.
மனைவியைக் கண்டதும் அவன் என்ன சொல்லி இருப்பான்? (அ) என்ன சொல்லி இருக்க வேண்டும்?
அவன் சொன்னது, “அழாதே! நான் உன்னோடு உண்டு!”
அந்த குழந்தையின் இழப்பு அவனுக்கு மட்டுமல்ல, அவளுக்கும் தான். இளங்குருத்தை இழப்பது, அதுவும் தவறுதலால் இழப்பது மிகப் பெறும் வேதனை. என்றாலும், அவளை புண்படச் செய்வதால் என்னக் கிடைக்கும்? அவள் இனியும் வேதனைக்குள்ளாகி அவள் நிலையில் மாற்றம் உண்டாகும். அந்த தருணத்திலும் கணவன் ஆதரவாய் இருந்தால்.......!

No comments:

Post a Comment