Saturday 15 June 2013

வெள்ளை ரோஜா

சோதனைக் கடந்து
வாடிய முகத்துடன்
வீட்டினுள் நுழைய,
வாடா மலராய்
என்முன் னவள்.

அழகிய ரோஜா
மலர் தரும் சுகந்தம்
அவள் மீது.
குற்றால மத்தாப்பாய்
அவள் சிரிப்பு.

என்னிமைகளைத் தொட்டது
அவளது மெல்லிதழ்,
இருந்த என் வேதனை
வாசலில் தொலைத்தேன்,
வெண்மலரவள் மடியில்
மீண்டும் பிறந்தேன்.

No comments:

Post a Comment