Tuesday 4 June 2013

பட்டைக் கோடு

சென்னை புறவழிச் சாலை,
பறக்கும் வாகனங்கள்,
மிதக்கும் மனிதர்கள்,
உருகும் தார் சாலை,
சாலையை நெடுக்காய் பிரிக்க
வரைந்த
வெள்ளை பட்டைக் கோடுகள்.
ஏன் இப்படி?
தன் திசையை மறந்து
வெவ்வேறு திசையில்
வேடிக்கைப் பார்க்கின்றன?
வெப்பத்திலும், மழையிலும்
உறுகியும், சுறுங்கியும்....
சீராகப் போகுமென
எண்ணித் தொடங்கும்
மனிதனின் வாழ்வைப் போல....!

No comments:

Post a Comment