Saturday 22 June 2013

வாழ்வெல்லாம் நீ



கண்ணுக்குள் இமை மூடி உனைத் தேட
கனவுக்குள் கவி பாடும் நீ!
விண்ணுக்குள் உனைத் தேடி நான் போக
விண்மீனில் ஒளிர் மதியாய் நீ!
மண்ணுக்குள் விதையாகி விருட்சமென
மனதுக்குள் வியாபித்தாய் நீ!
பொன்வீணை மீட்ட வரும் மெல்லிசையாய்
பெண்ணே என் வாழ்வெல்லாம் நீ!

No comments:

Post a Comment