Tuesday 4 June 2013

முறுவலா? கேலியா?

ஒரு கோடைமழை மாலையிலே
வீட்டின் முற்றத்தே
பின்னல்தலை முன்னிட்டு
மின்னலை தன் கண்பொருத்தி
கன்னல் பெண்ணொருத்தி
மஞ்சளுடை உடுத்து
கண்களிலே
எனை அளவெடுத்து நின்றாள்.
புது மலரென நாசி விரிய
உதடி லோர் சுழிப்போடு
எனைப் பார்த்தாள்.
உதட்டுச் சுழி
நாட்டியத்தில்
புது முத்திரையா?
அது சொல்வதென்ன?
முறுவலா? கேலியா?

No comments:

Post a Comment