அந்த பிரசாரகர் கோவிலுக்கு சரியாக மாலை 6
மணிக்கு பிரசாரத்திற்கு வந்து சேர்ந்து, இறைவன் நாம்ம் சொல்லி சொற்பொழிவைத்
தொடங்கினார். தெருக்கோடி நாய் ஒன்று வேகமாக ஓடி வந்து பிரசாரகரைப் பார்த்து இடைவிடாது
குரைக்க ஆறம்பித்தது.
பொருத்துப்
பார்த்த பிரசாரகர் அந்த நாயை அங்கிருந்த தூணில் கட்டியிட ஆணையிட்டார்.
அடுத்த
நாளும் இவர் வந்து சொற்பொழிவைத் தொடங்கிய உடனே, நாய் எங்கிருந்தோ ஓடி வந்து
குரைக்க தொடங்கியது. பிடித்து தூணில் கட்டி வைத்து பிஸ்கட் போட்டனர்.
அடுத்த
நாளும் இதே போல் நிகழ்வு. அந்த பிரசாரகர் வந்து பேசிய அந்த வார நாட்கள் அனைத்திலுமே
இந்த சம்பவம் நடந்தது.
அடுத்த
வருடம் பிரசாரகர் வந்தார். நாயும் காத்திருந்து ஓடி வந்தது.
எனவே பிரசாரகர் சொன்னார். இனி நாயை நான்
வருமுன்னே தூணில் கட்டி வைத்து பிஸ்கட் போட்டு விடுங்கள் என்று. இப்படியாக
பிரசாகர் வந்து பேசும் முன்னே அந்த தூணில் நாயைக் கட்டி வைத்து பிஸ்கட் இடும்
பழக்கம் தோன்றியது.
இரண்டு
வருடங்களில் பிசாரகர் மாறினார், நாயை தூணில் கட்டும் பணி தொடர்ந்தது. நாய்
மறித்தது, எனினும் வேறு நாயைக் கட்டி வைத்தனர்.
ஆக,
எந்த பிரசாரகர் வந்தாலும், அந்த கோவிலில், சொற்பொழிவைத் தொடங்கும் முன்னே ஒரு
நாயைத் தூணில் கட்டி வைப்பது வழக்கமாகி விட்டது. எதற்கு கட்டுகிறோம் என்று இன்று
எவர்க்கும் தெரியாது. ஆனால், கட்டி வைத்தல் தொடரும்.
இப்படித்தான்
நாம் எல்லா சம்பிரதாயங்களையும், எதற்காக செய்கிறோம் என அறியாமல், கண்மூடித் தனமாக
பின்பற்றிக் கொண்டு இருக்கிறோம்.
No comments:
Post a Comment