Tuesday 25 June 2013

இனியவளே

என் இனியவளே!
எனக்கு இனி அவளே என்றானவளே!
என் உயிர் மூச்சின் உன்னத ஒலியாய்,
உள்ளிழுக்கும் சுவாசமாய்,
உதிரத்தின் ஓட்டமாய்,
உற்சாக பெரு மழையாய்,
உறவின் உயிர் துடிப்பாய்,
என்றும் என்றென்றும் இருப்பவளே!
விழி மூடி
உன் அணப்பில் கட்டுண்டு
யுகங்கள் பல காண
ஆவலடி!

உயிர் தேடல் நீயாக,
உணர்வினிலென் தாயாக,
என் நினைவு முழுதும்
கலந்தாயே!

எத்தனை பிறவி எடுத்தாலும்
உனக்கென்றே உயிர் வாழ்வேன்.
இது உறுதி!

எந்தனுயிர் நீயாக,
உந்தனுயிர் நானாக….!

No comments:

Post a Comment