Friday 7 June 2013

இசைமழையே


கைசிலேட்டில் எழுதியதை
அழிக்க வந்த கொடுமழையே!
இக்காட்சியின் கவித்துவத்தை
அழிக்க உன்னால் இயலுமா?
உடுப்பும், படிப்பும் நனைந்தாலும்
தன் தம்பிகளை நனையாமல்
கொண்டுபோக எத்தனிக்கும்
அக்காள்கள்,
நண்பர்களின் கரம் பற்றி
கூட்டாகக் கரைசேரத் துடிக்கும்
ஒரு சிறுவன்,
அம்மாவின் திட்டைக் கூட
அலட்சியமாய்
ஒதுக்கத் துணிந்த
இன்னொருவன்,
கைகளிலும் தோள்களிலும்
பாரங்கள் பெரிதில்லை,
தம்பியை தூக்கிப்
போவோமா
எனத் துடிக்குமொரு
அக்காள்,
இவர்கள் இதழொலியின்
இன்னிசையை மிஞ்ச
இசைமழையே உன்னால்
இயலுமா?

No comments:

Post a Comment