Thursday 6 June 2013

என் செய்வாள்

ஆராரிரோ பாடிடும்
அவள் உதடுகள் அனிச்சையாய்,
தெருக்கோடியில்
தாயின்றி தவிக்கும் கன்று,
உள்ளறையில் முனகும்
உறக்கமற்ற தந்தை,
தொட்டிலில் விரல் குடிக்கும்
தந்தை முகம் கனவில் தோன்ற
விஞ்சி நிற்கும் முறுவலுடன்
அவள் குழந்தை.
எங்கே அவள் துணைவன் மட்டும்?
உறுதுணையாய் வருவேனென
உறுதி சொன்னவன்,
தீ முன்னே கைபிடித்து
தனை அவனுள் கொண்டவன்,
ஒரு நாள் மாலையில்
அவளில்லா வேளையில்
ஒரு கயிற்றில் உயிர் விட்டான்.
காரணம்
கடன் தொல்லை.
சுய நலக்காரன்.
அவள் கவலைப் போக்காமல்
தன் கவலை தீர்த்தவன்.
சிறு வயதில்
பெருஞ்சுமையைக் கொண்டு
என்செய்வாள் அவள்?

No comments:

Post a Comment