என்னக் கொடுமை யிது?
பச்சிளம் மண்ணு,
பார்வையிலே பிஞ்சு,
பருவமெய்தினாளாம்.
இயற்கையின் நிகழ்வன்றோ இது?
இதற்கெதற்கு விழா?
கண்மலங்க விழிக்குமவளை
கண்ணெழுதி, அரிதாரமெல்லாம் பூசி,
பட்டாடையுடுத்தி
ஊரெல்லாம் அழைத்து
விருந்து கொடுத்து,
தன் மகளை ஊரார் முன்
நாணித் தலை குனிய வைக்கின்ற
பெற்றோரை என்ன சொல்ல?
பேதமையென்றா?
பணத்தாசையென்றா?
No comments:
Post a Comment