போர்களத்தில் உயிர்கொடுத்து
பகைவர்களை வேரறுத்து
எம்முயிர்கள் காத்திடுவான்
படை வீரன்.
மலையிடிந்து மரமிடிந்து
வீடிழந்து வனமிழந்து
வாழ்க்கையற்றுப் போன
எம்முயிரையும்
இயற்கையிடம் போராடி
பெறுவதென்றால்
பெறும் சுமைதான்.
அவ்வீர்ர்களை
எங்கள் ஒவ்வோரணுவும்
பாராட்டும்,
எம்முயிர் உள்ளவரை.
ஜெய் ஹிந்த்!
No comments:
Post a Comment