கடவுளாய் மாறு!
தொடங்கிடு உன் வாழ்வை
சற்றும் சளைக்காது,
சுற்றும் உள்ளவரைச் சாராதே,
பற்றுக் கொண்டவரைப் பேணாதே,
முற்றும் துறந்திடவும் எண்ணாதே!
சோப்பின் நுரை ஊதி
சுற்றும் வடிவத்தில்
உன் உலகைக் காண்!
உனக்கென்றோர் உலகம்,
அதில் நீ மட்டுமே வாழ,
உன்னில் ஒரு பாதி
இங்கே வாழட்டும்,
நீ மட்டும் உன் உலகின்
கடவுளாய் மாறு!
No comments:
Post a Comment