காலையில் விழிக்கையில்
எழில்முகம் கண்டால்
நாளைத் தெளிவாய்
கடந்திட இயலும்.
மாலையில் வந்துன்
மதிமுகம் காண்கையில்
எந்தன் அயற்சிகள்
எனைவிட் டோடும்.
இரவினில் என் தலை
உன் மடி சாய்கையில்
இதயத்தில் அமைதி
இன்னிசை பாடும்.
எந்தன் நலமும்,
எந்தன் சுகமும்
உந்தன் வாழ்வின்
கடுந் தவமாக!
எல்லாம் சரிதான்,
எனக்கெலாம் நீதான்.
உனக்கெலாம் நானாய்
ஒரு நாளேனும்...?
எழில்முகம் கண்டால்
நாளைத் தெளிவாய்
கடந்திட இயலும்.
மாலையில் வந்துன்
மதிமுகம் காண்கையில்
எந்தன் அயற்சிகள்
எனைவிட் டோடும்.
இரவினில் என் தலை
உன் மடி சாய்கையில்
இதயத்தில் அமைதி
இன்னிசை பாடும்.
எந்தன் நலமும்,
எந்தன் சுகமும்
உந்தன் வாழ்வின்
கடுந் தவமாக!
எல்லாம் சரிதான்,
எனக்கெலாம் நீதான்.
உனக்கெலாம் நானாய்
ஒரு நாளேனும்...?
No comments:
Post a Comment