Sunday 23 June 2013

கொலைகாரி

 

அவனெழுதிய காதல் கவிதையை

ஆயிரம் முறை படித்து
மயிலிறகாய் பாவித்து
புத்தக அலமாரியில்
பதுக்கி வைத்தேன்.

இரண்டு நாள் அவனெழுத்தைக்
காணாத ஏக்கத்தில்
அவன் கவிதைத் தேடி
அலமாரி திறந்தேன்.
எங்கிருந்தோ வந்த
என் எதிரி,
புத்தகத்தின் இடையிருந்து
மீசையை ஆட்டிக்கொண்டு
மிரட்ட
பதற்றத்தில்
புத்தகம் தவற
ஏற்கனவே நைந்திருந்த
கவிதை தாள்
கிழிந்து போனது,

இது நாள் வரை
எதிரியைக் கண்டு
வெகுண்டு ஓடிய நான்
அன்று வந்த ஆத்திரத்தில்
அவனை அடித்தே கொன்றேன்.
நானும் கொலைகாரியானேன்.

No comments:

Post a Comment