இதழின் இன்பம் கடந்து
இயற்கையின் இன்பம் தேடு!
உடைகளில் இன்பம் தொலைத்து
உண்மையின் வடிவம் தேடு,
உணவினில் இன்பம் களைந்து
உணர்வினில் அன்பைத் தேடு,
தேடுவதெல்லா மிங்கே
உண்மையாய் இருப்பதில்லை.
உண்மையின் உருவமதை
உணர்ந்து நான் அறியவில்லை.
நம்மிடை மனிதரிலோர்
நால்வரை அறிந்ததனால்
உலகையே உணர்ந்ததாய் நான்
பெருமிதம் கொள்ளலாமோ?
என்னுளப் புரிதலில் நான்
என்னையே அறிந்திடவே
இயற்கையை நாடிடவோ?
இறை நிலைத் தேடிடவோ?
இயற்கையின் இன்பம் தேடு!
உடைகளில் இன்பம் தொலைத்து
உண்மையின் வடிவம் தேடு,
உணவினில் இன்பம் களைந்து
உணர்வினில் அன்பைத் தேடு,
தேடுவதெல்லா மிங்கே
உண்மையாய் இருப்பதில்லை.
உண்மையின் உருவமதை
உணர்ந்து நான் அறியவில்லை.
நம்மிடை மனிதரிலோர்
நால்வரை அறிந்ததனால்
உலகையே உணர்ந்ததாய் நான்
பெருமிதம் கொள்ளலாமோ?
என்னுளப் புரிதலில் நான்
என்னையே அறிந்திடவே
இயற்கையை நாடிடவோ?
இறை நிலைத் தேடிடவோ?
No comments:
Post a Comment