Sunday 23 June 2013

நர்த்தகி

அள்ளி முடித்த சேலை
துள்ளிக் குதித்த கால்கள்
விண்ணை முட்டும் பார்வை
விரல்கள் வண்ணச் சோலை

தன்னில் என்னைக் கொண்டாள்
என்னில் நிறைந்து நின்றாள்
அன்பின் ஆழம் கொண்டு
என்னை ஆள வந்தாள்.

கண்ணில் தாளமிட்டு
விண்ணில் பாதம் தொட்டு
மண்ணில் என்னை வென்ற
மந்திரம் தானென்ன?

No comments:

Post a Comment