Saturday 1 June 2013

உன்னைக் கண்பேனோ?

உறை நிலை பனி
ஒரு துளியெடுத்து
உதிரத்தில் கலந்தேன்.
விதை யிலா கனி
நிலந் தனில் விதைத்து
வருவதைக் காத்தேன்.
மௌனம் கலைத்து
மறைபொருள் தொலைத்து
நிழலினைக் களைந்தேன்.
விரதம் இருந்து
விரலைக் கடித்து
விதியை பழித்தேன்.
உறவின் நடுவில்
உள்ளம் சுருக்கி
உன்னைத் தேடினேன்.
உயிரின் ஒளியை
தொலைக்கு முன்னே
உன்னைக் காண்பேனோ?

No comments:

Post a Comment