Saturday 8 June 2013

விடை கொடு

எங்கே என் செல்ல தேவதை?
தென்றலில் பயணிக்கும்
தித்திப்பு ராணி,
விண்ணிலே எனக்காக
உருவான பூ நீ.

ஒருவாரம் உனைவிட்டுப்
போய்வரக் கேட்டேன்,
மறுபேச் சில்லாமல்
மனக் கவலைக் கொண்டாய்,

நீயின்றி நான் வாழும்
ஒரு நாளும் ஒரு யுகமே!
நீரின்றிக் கரை வீழ்ந்த
கயலாகிப் போவேனே!

நம் வாழ்க்கை மேலோங்க
நான் போக வேண்டுமடி,
தாமரையே, இதழ் விரித்து
புன்னகைத்து விடை கொடடி!

No comments:

Post a Comment