Sunday 2 June 2013

மழை நேர பைக்

மாறாப் புன்னகையுடன் என் முதுகை
அணைத்துக் கொள்ளடிப் பெண்ணே!
முகத்தில் வழியும் மழை நீரை வழித்தெறி!
கண்ணில் அணிந்த கருந்திரையை மடக்கி வை!
துடிக்கும் துப்பட்டாவை
நம்மிடுக்கில் சுருட்டி வை!
கட்டிக் கொள்!
என்னை இன்னும் கட்டிக்கொள்!
மழைகாற்றின் விசையெதிர்த்து
வாகனத்தை விரல் பிடித்து
நான் விரட்ட
கொட்டும் மழை நடுவே
சொட்ட சொட்ட நனைந்தாலும்
அட்டைப் போல் ஒட்டிய உன்னை
வாழ்வின் ரகசியமான
மறக்க இயலாத
பத்து நிமிடங்களில்
வீட்டில் கொண்டு சேர்ப்பேன்
என் கண்ணே!

No comments:

Post a Comment